Delegation

 The most undervalued skill for founders:


Delegation.

It helps you scale your business and maximize output while maintaining a healthy work-life balance.

Here's how I work just 20 hours/week (and make $1.2M/month):

1. Create a Job Description in a Google Doc

Describe how your ideal candidate will perform.

Include:

• The role overview
• What they will be doing
• What skills they need to have
• Why they will love working with you

2. Create Their Objectives and Key Results (OKRs)

Ask yourself:

What does success look like for this person in the first 90 days?

I use the SMART goals framework:

• Specific
• Measurable
• Achievable
• Relevant
• Time-Bound

Here are some of the actual SMART goals I set with my assistant:

- Schedule 10 social posts to go out every day
- Schedule 50 sales meetings a week
- Generate $30k of sales per month

3. Create an Onboarding System

The hardest part of having a good working relationship with a Growth Assistant is onboarding them.

The hack:

Create a Google Sheet with all onboarding tasks in these columns:

• Systems
• Department
• Documentation
• Loom Video
• Owner

4. Build a Notion Company Wiki

A Company Wiki is where all of your key documents and systems live.

You want to reduce the number of times you get basic questions:

"What are our brand guidelines?"
"Where are our logos?"

5. Improve Your Systems via Feedback

Your Loom videos and systems are never set in stone.

Set up a weekly meeting to refine all your processes and eliminate confusion.

Agenda:

• What's going well?
• What's not going well?
• What can we improve?

6. Take Pride in Your Systems

"You do not rise to the level of your goals. You fall to the level of your systems." - James Clear

Your systems are the engine that keeps your entire operation working.

Keep them updated monthly and delete/re-evaluate tasks that aren't effective.

7. Work with a Hiring Partner

If it's your first time hiring a Growth Assistant you need to get help.

You're going to waste a lot of time reviewing resumes and coordinating interviews.

Working with a hiring partner solves all of that.

They do all the interviews, background checks, and negotiations.

I focus on the job description, objectives, and onboarding systems.

Without health, you have nothing

I have read somewhere the below one:

 Be super-selfish about your wellbeing. Without health, you have nothing. And remember, your lack of health affects not just you but those who hold you dear.

Be a "go-getter" and "challenge seeker" all you want, but remember that without health, you have nothing.

I'm noticing the disturbing trend of working people developing hypertension in their early 30's or late 20's.

When we go against nature and our circadian rhythm for a few thousand rupees in the short term, we will pay a terrible price in the medium to long term.

Be a corporate shark all you want, but remember what you gain through sacrificing your health, you will pay to the doctor. Better still, re-evaluate your priority list, and place health and mental wellness ahead of work "success."

Atomic Habits: Playing to your strengths, cultivating a beginner's mindset, and the power of hope

1. 

"In school, you are graded on every test—even if it's your weakest subject.

In life, you can choose the tests you take—even if they always play to your strengths.

Maintain a baseline so your weak areas don't hold you back, but design your life so you are graded on your strengths."


2.

"One roadblock almost never ruins you.

There might not be 1000 ways to accomplish something, but there is almost always more than one way.

Know what you want. Be flexible about how to get there."


3.

"The gift of a beginner is fresh eyes.

The longer you're in a field, the harder it is to perceive new truths. Your mind is biased toward refining what you're already doing instead of exploring fresh terrain.

Take your expertise and apply it to something new."

QUOTES

Holocaust survivor and teacher, Helen Fagin, on the power of hope:

"There are times when dreams sustain us more than facts."

Atomic Habits: How to divide your to-do list, and the universal nature of writing

 A simple reminder from Atomic Habits:

"Walk slowly, but never backward."

​II.

"Look around your environment.

Rather than seeing items as objects, see them as magnets for your attention. Each object gently pulls a certain amount of your attention toward it.

Whenever you discard something, the tug of that object is released. You get some attention back."


III.

"Powerful combination = Hate being bad at stuff + Willing to look like a beginner.

People who hate being bad at stuff are driven to improve. However, if they are unwilling to look like a beginner from time to time, they will avoid new challenges and struggle to reinvent themselves.

Meanwhile, people who are willing to try new things, but lack a thirst to improve will settle for mediocre results.

It's the willingness to look foolish for a short time—but not for a long time—that leads to jumps in performance."

2 Quotes From Others

I.

Writer Jenée Desmond-Harris on how to divide your to-do list:

"I started dividing my to-do list into 1) things I have to do, 2) things I want to do, and 3) things other people want me to do. Life changing! I often don’t get to #3 and I finally realized... this is what it means to have boundaries."

​II.

Poet and novelist Margaret Atwood on the universal nature of writing:

"Everyone writes in a way; that is, each person has a "story," a personal narrative which is constantly being replayed, revised, taken apart, and put together again. The significant points in this narrative change as a person ages—what may have been tragedy at twenty is seen as comedy or nostalgia at forty. All children write. (And paint, and sing.) I suppose the real question is why do so many people give it up?"

1 Question For You

What is a small, but courageous choice you can make today?


Source: John Clear

தோனி

 சமீபத்தில் நடந்து முடிந்த IPL இறுதி போட்டி அனைவருக்கும் நினைவிருக்கலாம் ..

இதுவரை உலக கிரிக்கெட் வரலாற்றில் எந்த பெரிய டோர்னமெண்ட் சாம்பியன்ஷிப் கப் வாங்கும் போதும் (இது மற்ற விளையாட்டுகளிலும் நடந்ததா தெரியவில்லை ) எந்த ஒரு கேப்டனும் உடன் அணியின் நட்சத்திர வீரரரையும், அணியில் இருந்து ஓய்வு பெற போகும் வீரரரையும் சேர்த்து அழைத்து க்கொண்டு அவர்களை முன்னிருத்தி அவர்களை சாம்பியன்ஷிப் கப் வாங்க சொன்னதில்லை..
அதான் தோனி... பெரும் தலைவனுக்கான குணம்!
கடந்த ODI உலக கோப்பை அரையிறுதி போட்டி நினைவிருக்கலாம்...
கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் இந்தியா தோல்வி அடைந்தது மறக்காது...குறிப்பாக அந்த ரன் அவுட் க்கு பின் கண்ணீருடன் வெளியே வந்த தோனி முகம்.. மறக்கவே மறக்காது
அவுட் ஆகி வெளியே செல்லும் நொடி வரை...
ஒவ்வொரு இந்திய ரசிகன் மனதில் ஒரு தைரியத்தையும்.. எதிரணி தரப்பில் ஒவ்வொருவரின் மனதில் பயத்தையும் உண்டு செய்த அந்த பெயர் தான் தோனி....
தோனி ஒரு சாம்பியன்... சிறந்த கேப்டன்... லீடர்... கீப்பர்... இதெல்லாம் தாண்டி தோனி ஒரு உணர்வு..... அவர் நம்மை போல ஒருவர் என உணர்த்தியவர்...
அவர் கடைசி ஒருநாள் போட்டியில் அழுதுகொண்டே வெளியே வந்த போது... பார்த்துக்கொண்டு இருந்த கோடி கண்களின் ஓரம் இருந்த கண்ணீர்.. அந்த பெயர் தான் தோனி...
உலகில் ஒரு பெரும் கூட்டத்தை கட்டிப்போட்ட Sporting Legends வரிசையில் தோனி க்கு ஒரு தனி இடமுண்டு...
""ராஜகோபாலன்...சச்சினோட டை ஹார்ட் ஃபேன் நீ... நீயும் தோனி க்கு ரசிகன் ஆனது தான் ஆச்சரியம்" என்றே பலர் என்னை கேட்டுள்ளார்கள்
இளையராஜா ரசிகன் ரஹ்மானையும் ரசிக்க முடியாது என்கிற முட்டாள்தனமான மனோபாவம் இது...end of the day both are Legends in their own way... சச்சின் எனக்கு வாழ்க்கை முறை..என் கூட வளர்ந்த நபர்....என் ஒவ்வொரு நினைவிலும் சச்சின் நினைவு கலந்து இருக்கும்...தோனி நான் முதலில் விலகி இருந்து பார்த்து பிறகு பிடித்து பார்த்து பிறகு ரசிக்க தொடங்கி பிறகு பிரமிக்க தொடங்கிய நபர்...இதெல்லாம் நடக்கவே நடக்காது என்று நினைத்ததை நடத்தி காட்டியது தோனி...
சிம்பிளா சொல்லணும் ன்னா...தோனி ஒரு டிபிக்கல் ஐட்டக்காரன்... வாழ்க்கைல சில சம்பவம் இருக்கும்... சம்பவம் செய்வதையே வாழ்க்கையாக அமைத்து கொண்டார் தோனி..
The Legend of Dhoni will live on.
எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமான தோனி நினைவு... அவரின் பேட்டிங், கீப்பிங் moments அல்ல... தன் முதல் கேப்டன் கங்குலியின் கடைசி ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில்..அவரை கேப்டன்சி செய்யுமாறு அழைத்தது...
This man is something என நான் உணர்ந்த தருணம்.
1) எந்த சூழலிலும் பதட்டம் என்பது நாமாக உடுத்தி கொள்ளும் ஆடையே ஒழிய, நமக்கும் கிடைக்கும் ஒரே ஆடை அல்ல.. அதை தாராளமாக புறம் தள்ளலாம்
2) வாழ்வில் வெற்றி தோல்வி இரண்டுமே ஒரு நிகழ்வல்ல, அது இயல்பு.. நாம் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்.. அனைவரும் ஜெயிக்கவே விரும்புவர்.. செய்வதை சரியாக செய்தால், தோல்வி பெற்றாலும் அது வெற்றியே.
3) தோல்வியை பக்கத்தில வைத்து மட்டுமே ஆராய வேண்டாம்... வெற்றியை தள்ளி நின்று மட்டுமே ரசிக்க வேண்டாம்..
4) தோல்வி வருத்தப்படுவதற்கான ஒரு விசயம் மட்டுமல்ல.. வெற்றி கொண்டாடத்துக்கான ஒரு விசயம் மட்டுமல்ல.. இரண்டிலும் படிப்பினை ஏராளம்..
5) தோல்வி க்கு காரணம் அறிகிறவன் வெற்றியை நோக்கி பயண படுகிறான்.. வெற்றி க்கு காரணம் அறிகிறவன், வெற்றியை எப்போதும் தக்கவைத்துக் கொள்கிறான்
6) ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.. அதை அவர்களிடம் பெற்று கொண்டால் போதும்.. அனைவருமே எல்லாமும் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அந்த தனித்தன்மை யும் விலகி, அந்த நபரையும் நம்முடைய அணியில் இருந்து நாம் இழக்க நேரிடும்
7) நம்முடைய strength நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் நம்முடைய weaknessம் தெரிந்து வைத்துக் கொள்வது... நீங்கள் தலைவர் என்றால் உங்கள் அணியின் strength weakness மிக நிச்சயமாக நுணுக்கமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்
8 ) உன்னை மட்டம் தட்டும் ஒவ்வொருவருக்கும் நீ பதில் சொல்ல தேவையில்லை, உன் வேலையை நீ செவ்வனே செய்து வந்தால், பதில் தானாகவே சென்றடையும்
9) எவ்வளவு பெரிய இடத்துக்கு சென்றாலும் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் கால் தரையில் இருக்க வேண்டும்... தலைக்கணம் துளியும் தேவை இல்லை.
10) இக்கட்டான சூழலில் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்.. அப்பொழுது தான் வெற்றியோ தோல்வியோ அதை நேரடியாக சந்திக்க உன் மனம் பக்குவப்படும்.
11) உன்னால் முடியாது என்பதை நீ ஒப்புக்கொள்ளும் வரை உன்னால் முடியும்
.... இப்படியாக கிரிக்கெட் விளையாட்டு, அதில் இருக்கும் நுணுக்கம், கேப்டன்ஷிப், இளைஞர்களை ஊக்க படுத்துவது.. இதையெல்லாம் தாண்டி.. இந்த மனிதரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் ஏராளமான உண்டு... நான் புரிந்து கொண்ட சில முக்கிய படிப்பினை இவை..
ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்... Any Psychology students, Business schools, Leadership institutes, can take a lot of leaves out of his book.
டெஸ்ட் போட்டியிலிருந்து , கேப்டன்சியிலிருந்து இவர் விலகிய விதம்... யாரும் கிரிக்கெட்டை விட முக்கியமானவர் அல்ல என்பதை உரக்கச் சொல்லி சென்ற கம்பீரம்
முற்றிலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் போதும்... நாளைக்கு திங்கட்கிழமை என சொல்வது போல சொல்லி விலகி செல்வார் என்பதில் சந்தேகமில்லை... என்றே என்னுடைய முந்தைய தோனி பதிவுகளில் எழுதினேன்...
அதை விட மோசமாக...சரி நான் தூங்க போறேன் குட்நைட் என்பதை போல இன்டர்நேஷனல் ரிட்டையர்மெண்ட்டை அநௌன்ஸ் செய்தார்..
IPLல் இது தான் என் கடைசி ஆட்டம் என்பதை சொல்வதிலும் அப்படியே செய்வார்
Life is Crazy, Take it Easy .. இதான் தோனி ஸ்டைல்..
இந்த உலகத்தில்... , மனிதனின் தனிப்பட்ட இன்ப துன்பத்திற்கு பல சிறிய சிறிய உலகங்கள் உண்டு.. நான் ஒரே நேரத்தில் பல உலகங்களில் வாழ்ந்து மகிழ்ந்து வருகிறேன்... தமிழ் இலக்கியம், சச்சின், இளையராஜா, ரஜினி, ரஹ்மான்... இப்படியாக பெரும் மகிழ்ச்சி தரும் பல உலகங்கள் உள்ளன...
அப்படி நானிருக்கும் இன்னொரு உலகம் உண்டு.. அந்த உலகத்தில் பரபரப்பு க்கு பஞ்சமில்லை.. மாஸ் க்கு பஞ்சமில்லை.. Swag க்கு பஞ்சமில்லை... கருத்து வேறுபாடு க்கு பஞ்சமில்லை... குறைகளுக்கு பஞ்சமில்லை.. .. இதுவும் ஒரு தனி உலகம்.. இந்த உலகத்தில் இருப்பவருக்கு தான் இது புரியும்..... தோனியின் உலகம்...
The Name Is MS Dhoni
இன்னும் சில பல வருடங்கள் கழித்து , ஒரு உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெல்லும் நிலையில் இருக்கும் போது... ட்ரசிங் ரூமிலிருந்து பயிற்சியாளர் இரு கை தூக்கி ... "நிதானம் நிதானம்.. இன்னும் ஜெயிக்கவில்லை" என சாந்த படுத்தி ...வெற்றி கிட்டும் வரை கால் தரையில் இருக்க வலியுறுத்துவார்... வென்ற பின்னும் அப்படி இருக்க வேண்டுகோள் வைப்பார்..
வெற்றி கொண்டாட்டங்களை ஒரு ஓரமாக நின்று ரசிப்பார்... அனைவரும் புகைப்படங்கள் எடுத்து கொண்டிருக்க, இவர் ஓரமாக சில குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருப்பார்...
அந்த பயிற்சியாளர் பெயர் ..
மகேந்திர சிங் தோனி...

Do not try to be the man your father would want you to be. Be the man you would like your son to be be. It more clearly defines your own convictions, desires, goals, and motivates you to be your best.



Daily Motivation

 r/GetMotivated - [image] Absolute Motivation

🐪 நூறு ஒட்டகங்கள்...🐪 - Tamil Positive Stories

 ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்.. தூங்க முடியவில்லை.. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் என்றவாறே முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

அப்போது மாலை நேரம்.
முனிவர் அவனிடம் "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்....
சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்....
"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..
"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்..
"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்..
"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன..
சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்.
ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை.
சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..
அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை" என்றான்.
முனிவர் சிரித்தபடியே "இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது..
சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்.. ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம்...
அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது..
தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் " என்றார்.
வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது...
அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே..
ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...
அப்படியே நமக்கான பிரச்சனைகள் தானே தீர்வதற்கான காலமும் உள்ளது.
Like
Comment
Share

7 comments

My Son

 His name is Pavan he loves me more than his mother. He always looking or searching me whenever I am in home. 

For his true love what I am going to give back?

  • Lead by an example
  • Stay discipline
  • I am his true friend
  • I need to get all the good things in life
  • Listening to his all stories
  • Playing with him in the park
  • Dropping him in the school
  • Picking him up back to the home
  • Showing him the way how to pick your true love
  • Travelling with him all over hills in India
  • Have a dinner with him in the hotel which he like very much due to he love trains to watch while eating.
  • Never lie 
  • Pick your calls 
  • Speak clearly
  • Ask Questions
  • Keep updating.. 




2 Choices

 I have 2 choices now like A.R told. Choose Love instead of showing hate.

Back to my blog after ages.

 இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...

(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை)
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.....
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
அதையும் பெரிது பண்ணாதே......
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
ஒவ்வொரு மனிதனும்
தனித்தனி ஜென்மங்கள்.
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்.....
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....
அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது......
இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்....
அது,
உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,
நண்பர்களாக இருந்தாலும்,
கணவன், மனைவியாக இருந்தாலும்,
பெற்ற குழந்தைகளாக இருந்தாலும்,
பேரன் பேத்திகளாக இருந்தாலும்,
எந்த உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.......
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....
பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....
அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு........
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும்,
தான் யார்? தன் குணம் என்ன?
என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்....
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.....
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்....
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.....
உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்....
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.....
உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்.
"அழுது சுமப்பதை காட்டிலும், ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்."
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்....