Showing posts with label balakumaran words. Show all posts
Showing posts with label balakumaran words. Show all posts

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள்...

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது.


  • புத்தகங்களை துணை கொள்.
  • உடலுழைப்பை அதிகரி.
  • சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
  • குளிர் நீரில் குளி.
  • கொஞ்சமாய் சாப்பிடு.
  • தியானம் கைகொள்.
  • இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
  • உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
  • உணவில் கீரை சேர்த்துக் கொள்.
  • எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
  • ஆத்திரம் அகற்று.
  • கேலிக்கு புன்னகை தா.
  • கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
  • நட்புக்கு நட்பு செய்.
  • வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
  • அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
  • அன்பு செய்தால் நன்றி சொல்.
  • இதமாகப் பேசு.

    நீ ஜெயிப்பாய். இது நிச்சயம். வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.
உலகத்தில் எல்லா முயற்சியும் யுத்தம்தான். வெற்றியில் விருப்பமெனில் வலி தாங்கு.புழுங்கிச்சாவதை விட போரிட்டு மடிவது உத்தமம்.வெறும் கனவுப் படுக்கையில் நோயுற்றுச் சாவதைவிட யுத்த நினைவுகளான அம்புப்படுக்கையில் பீஷ்மநென மடிவது மேல். இவ்விதி புரிந்தவருக்கு போர் எளிது. வாழ்க்கையும் ருசிக்கும்.

-இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
வெறுப்பில் பெண்ணுக்கு மனவலிவு மிகும்.பொங்கும் காதலில் லேசாகும். வேதனை வந்தால் ஆணுக்குத் தொய்வு வரும். சோதனைஎனில் தாங்கும் வெறி எழும். பிரிவில் பெண் பின்னமாவாள். ஆண் ஒன்றாவன். ஒருமுகப்படுவான். 

Its truly said by Balakumaran sir.