Showing posts with label best-tamil-motivational-stories. Show all posts
Showing posts with label best-tamil-motivational-stories. Show all posts

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள்...

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது.


  • புத்தகங்களை துணை கொள்.
  • உடலுழைப்பை அதிகரி.
  • சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
  • குளிர் நீரில் குளி.
  • கொஞ்சமாய் சாப்பிடு.
  • தியானம் கைகொள்.
  • இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
  • உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
  • உணவில் கீரை சேர்த்துக் கொள்.
  • எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
  • ஆத்திரம் அகற்று.
  • கேலிக்கு புன்னகை தா.
  • கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
  • நட்புக்கு நட்பு செய்.
  • வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
  • அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
  • அன்பு செய்தால் நன்றி சொல்.
  • இதமாகப் பேசு.

    நீ ஜெயிப்பாய். இது நிச்சயம். வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

வெற்றியின் ரகசியம்!

''நான் இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது, தோல்வியில் முடிந்ததையே
கண்டேன்.

வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான், 'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது.
'90' முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்!''

இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக் கூறியவர் யார் தெரியுமா?

பெர்னாட்ஷா!