Maha Periyavar

* குழந்தை குறும்பு செய்தால் பெற்றவர்கள் கட்டிப் போடுகிறார்கள்.
நம்மிடம் ஆசை என்னும் குறும்பு இருப்பதால் நம்மை இறைவன் கட்டிப் போடுகிறான்.

* எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் உண்மையாக இருப்பவனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். உண்மையாக இருப்பவன் இறைவன் மட்டுமே.

* நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூகசேவையெல்லாம் தேவையா என்ற எண்ணம் கூடாது. சேவை செய்வதால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும்.

* நெருப்பில் விட்ட நெய் தீயை அணைக்காமல் மேலும் வளர்க்கவே செய்யும். அதுபோல மனதில் எழும் ஆசையும் மேலும் வளரவே செய்கிறது.

* தர்மவழியில் நடப்பவனை பிராணிகள் கூட ஆதரிக்கும். 
அதர்ம வழியில் நடப்பவனுக்கு உலகமே எதிரி தான்.

* நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மை விட துன்பப்படுபவர்கள் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள்.

* யார்மீதும் கோப்பட நமக்கு தகுதி இல்லை. ஏனென்றால், உலகில் தப்பே செய்யாதவர் என்று ஒருவர் கூட இல்லை.

-காஞ்சிப்பெரியவர் 

No comments:

Post a Comment