வாழ்க்கை சுகமா இருப்பதற்கான பாஸிடீவ் வார்த்தைகளும் செயல்களும்...

’இன்னமும் என் மேல என்ன பயம்; மரியாதை. ச்சும்மா வாடிபோடின்னு சொல்லிப் பேசு’ன்னு புதியபாதை படத்துல சீதா சொல்லுவாங்க. உடனே பார்த்திபன், ‘வாடின்னா வேணும்னா சொல்றேன். போடின்னு சொல்லமாட்டேன்’னு சொல்வார். நச்சுன்னு இந்த டயலாக் அப்ளாஸ் வாங்கும்!
‘எங்கேயாவது போயிரு சப்பாணி’ன்னு மயிலு சொல்லும்போது, ‘செத்துபோன்னு வேணா சொல்லு, செத்துப் போயிடுறேன். விட்டுட்டுப் போன்னு சொல்லாதே மயிலு. நான் எங்கே போவேன்’னு கதறுவார் சப்பாணி.

கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, வாழ்க்கை சுகமா இருப்பதற்கான பாஸிடீவ் வார்த்தைகளும் செயல்களும் இதுதான்னு தோணுது! 
அன்பு இருக்கற இடத்துல, கடுப்பு, கோபம், ஈகோ, ஆத்திரம் எதுக்குமே இடமில்லை. இந்த அன்பு... ஒப்படைத்தலால் வர்றது! கூடுமானவரைக்கும் ஒப்படைத்து வாழ்வோம்!

Source: Facebook.com

No comments:

Post a Comment